விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? |

நடிகர் ரவி மோகன் புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி ப்ரோ கோட் என்கிற படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் யோகி என்பவர் இயக்கும் இந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். ஆனால் மிகப்பெரிய ஆல்கஹால் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தாங்கள் ப்ரோ கோட் என்கிற பெயரில் மது விற்பனை செய்து வருவதால் இந்த பெயரை டைட்டிலாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும்படி வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த பெயரை டைட்டிலாக பயன்படுத்துவதில் தடை இல்லை என்று கூறியது. ஆனாலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனம் வழக்கு தொடர்ந்து, இந்த டைட்டிலை ரவி மோகன் பயன்படுத்த இடைக்கால தடை வாங்கி உள்ளது.
இதைத்தொடர்ந்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் ரவி மோகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜெயம் ரவி தரப்பிலிருந்து வலுவான ஆதாரங்கள் இந்த முறை சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இவற்றை கவனமாக பரிசளித்த நீதிமன்றம் ஜெயம் ரவி தரப்பினர் கமர்சியலாக ப்ரோ கோட் டைட்டிலை பயன்படுத்துவதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற இருக்கும் இதன் அடுத்த கட்ட விசாரணையில் இதுகுறித்த இறுதி தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..




