‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மலையாளத்தில் பிரபல நடிகரும் தற்போதைய மத்திய இணை அமைச்சருமான சுரேஷ்கோபி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா)'. முழுக்க முழுக்க நீதிமன்ற பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிரவீன் நாராயணன் இயக்கியுள்ளார். ஜூன் 27ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு எந்தவித 'கட்'களும் இன்றி யு/ஏ 13+ சான்றிதழையும் பெற்றது. ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென சென்சார் குழுவினர் இந்த படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் செய்யும்படி படக்குழுவினருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
குறிப்பாக டைட்டிலில் இடம் பெறும் ஜானகி என்கிற பெயரை மாற்றும்படி அவர்கள் நிர்பந்தித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள படத்தின் இயக்குனர் பிரவீன் நாராயணன், அதனால் வரும் ஜூன் 27ம் தேதி திட்டமிட்டபடி இந்த படம் ரிலீஸ் ஆகாது என்றும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார். மீண்டும் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டு இதே டைட்டிலை தக்க வைப்பார்களா அல்லது டைட்டிலை மாற்றுவார்களா என்பது இனிமேல் தான் தெரிய வரும். ஒரு மத்திய இணை அமைச்சராக இருக்கக்கூடிய சுரேஷ்கோபி நடித்த படம் கூட சென்சாரில் சிக்கலை எதிர்கொள்கிறது என்பது ஆச்சரியமான ஒன்றுதான்.