வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி |
தெலுங்குத் திரையுலகத்தில் 30 சதவீத ஊதிய உயர்வு கோரி, தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு கடந்த இரண்டு வாரங்களாக ஸ்டிரைக் நடத்தி வருகிறது. இதனால், எந்தவிதமான தெலுங்கு திரைப்படப் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை.
இது தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா அமைச்சர்களை தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்தித்துப் பேசினார். தொழிலாளர் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தாங்கள் கேட்கும் ஊதிய உயர்வில் எந்தவிதத்திலும் பின்வாங்க மாட்டோம் என தொழிலாளர் தரப்பில் உறுதியாக உள்ளார்களாம்.
இதனிடையே, ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர சீனியர் நடிகரான சிரஞ்சீவி முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று இரு தரப்பினரையும் அழைத்து அவர் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அது இன்றும் தொடர்கிறது. தயாரிப்பாளர்கள் அவர்களுக்கென தனியாக ஊழியர்களை நியமித்து படப்பிடிப்பைத் தொடர பேசி வருகிறார்களாம்.
இந்த ஸ்டிரைக் காரணமாக படங்களின் வெளியீடுகளும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.