தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தெலுங்குத் திரையுலகத்தில் 30 சதவீத ஊதிய உயர்வு கோரி, தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு கடந்த இரண்டு வாரங்களாக ஸ்டிரைக் நடத்தி வருகிறது. இதனால், எந்தவிதமான தெலுங்கு திரைப்படப் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை.
இது தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா அமைச்சர்களை தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்தித்துப் பேசினார். தொழிலாளர் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தாங்கள் கேட்கும் ஊதிய உயர்வில் எந்தவிதத்திலும் பின்வாங்க மாட்டோம் என தொழிலாளர் தரப்பில் உறுதியாக உள்ளார்களாம்.
இதனிடையே, ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர சீனியர் நடிகரான சிரஞ்சீவி முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று இரு தரப்பினரையும் அழைத்து அவர் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அது இன்றும் தொடர்கிறது. தயாரிப்பாளர்கள் அவர்களுக்கென தனியாக ஊழியர்களை நியமித்து படப்பிடிப்பைத் தொடர பேசி வருகிறார்களாம்.
இந்த ஸ்டிரைக் காரணமாக படங்களின் வெளியீடுகளும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.