கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடிகை ஷாலின் சோயா மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'ராஜா மந்திரி' படத்தில் நடித்திருந்தார். மேலும் ‛குக் வித் கோமாளி 5' என்கிற ரியாலிட்டி ஷோவின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஷாலின் சோயா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் ஆசை குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: " எனக்கு நல்ல நல்ல படங்களை இயக்க வேண்டும் என்பது தான் கனவு. இதை நான் கூறினால், என்னை நடிக்கிறாள் என்று சொல்கிறார்கள். என்னைப் பத்தி என்ன தெரியும் அவங்களுக்கு ? 10 வருடங்களாக படம் இயக்க முயற்சி செய்து வருகிறேன். இதுவரை 8க்கும் மேல் குறும்படங்களை இயக்கியுள்ளேன். நாம வாழ்ந்து வரும் வாழ்க்கைக்கு அர்த்தம் வேணும். அது எனக்கு சினிமாதான். இறப்பதற்கு முன்பு ஒரு நல்ல இயக்குனர் என்கிற பெயரை நான் வாங்கணும். மக்களை என்டர்டெயின் பண்ணணும். அதுதான் என் லட்சியம். " என மனம் திறந்து பேசியுள்ளார் ஷாலின் சோயா.