மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! | ஒரே நாளில் சந்தானம், சூரி படங்களுடன் மோதும் யோகி பாபு | 45 வயது சந்தானத்துக்கு அம்மாவான கஸ்தூரி ! | சுதாவின் அடுத்த பட ஹீரோ சிம்பு! - ‛வேட்டை நாய்' நாவல் படமாகிறது! | வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன்! | நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும் கே.எஸ். அதியமான்! | ‛மெய்யழகன்' குறித்து நெகிழ்ந்து பேசிய நானி! | பல விஷயங்களில் மனம் மாறிய நடிகை | 1000 கோடி வசூல் கனவுக்கு சிக்கல்: அதிர்ச்சியில் உச்ச நடிகர் |
ராஞ்சானா, அட்ராங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து ஆனந்த் எல் ராய், தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'தேரே இஸ்க் மெயின்' . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு டில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடிக்கிறார்.
ஜெய்பூரில் நேற்றைய தினம் நடைபெற்ற 2025ம் ஆண்டிற்கான IIFA டிஜிட்டல் விருது விழாவில் பங்கேற்ற நடிகை கிர்த்தி சனோன் இத்திரைப்படம் தொடர்பாக பேசுகையில், ''ஆனந்த் எல். ராய் மற்றும் தனுஷுடன் தற்போது 'தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறேன். டில்லியில் நடக்கும் படப்பிடிப்பிற்கு நான் மீண்டும் வருவதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஓர் அழகான திரைப்படம். அத்திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இதற்கு முன் நான் நடித்திராத ஒன்று.
எனக்கு காதல் படங்கள் தான் மிகவும் பிடித்த ஜானர். இத்திரைப்படமும் காதலை மையப்படுத்தி வித்தியாசமாக தயார் செய்துள்ளார்கள். தனுஷூடன் முதல் முறையாக இணைந்து நடிப்பது அற்புதமான ஒன்று. அதுபோல திரைப்படமும் அற்புதமாக தயாராகி வருகிறது. நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்" என கூறியிருக்கிறார்.