மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ராஞ்சானா, அட்ராங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து ஆனந்த் எல் ராய், தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'தேரே இஸ்க் மெயின்' . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு டில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடிக்கிறார்.
ஜெய்பூரில் நேற்றைய தினம் நடைபெற்ற 2025ம் ஆண்டிற்கான IIFA டிஜிட்டல் விருது விழாவில் பங்கேற்ற நடிகை கிர்த்தி சனோன் இத்திரைப்படம் தொடர்பாக பேசுகையில், ''ஆனந்த் எல். ராய் மற்றும் தனுஷுடன் தற்போது 'தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறேன். டில்லியில் நடக்கும் படப்பிடிப்பிற்கு நான் மீண்டும் வருவதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஓர் அழகான திரைப்படம். அத்திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இதற்கு முன் நான் நடித்திராத ஒன்று.
எனக்கு காதல் படங்கள் தான் மிகவும் பிடித்த ஜானர். இத்திரைப்படமும் காதலை மையப்படுத்தி வித்தியாசமாக தயார் செய்துள்ளார்கள். தனுஷூடன் முதல் முறையாக இணைந்து நடிப்பது அற்புதமான ஒன்று. அதுபோல திரைப்படமும் அற்புதமாக தயாராகி வருகிறது. நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்" என கூறியிருக்கிறார்.