பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித் | மூன்றாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நயன்தாரா? | மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் |
கடந்த சில வருடங்களாகவே தென் இந்தியாவில் வெளியாகும் பல திரைப்படங்கள், பாலிவுட்டின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. பல பாலிவுட் இயக்குனர்கள், ஹீரோக்கள் தென்னிந்திய படங்களை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அனுராக் காஷ்யப் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் நடிப்பதையே பெரிய பாக்கியம் என்பது போன்று பேசி வருகிறார்கள். கடந்த வருடம் 'லாப்பட்டா லேடீஸ்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானின் இரண்டாவது மனைவி கிரண் ராவ். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய சினிமாவில் சிறப்புகள் குறித்து பேசிய அவர், அதே சமயம் தென்னிந்திய சினிமாவையும் பாலிவுட்டையும் ஒப்பிட முடியாது என்றும் கூறினார்.
“தென்னிந்திய படங்கள் குறிப்பாக மலையாளத்தில் வெளியாகும் படங்கள் கதைக்கும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து, மேலும் பல பரிசோதனை முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அதிலும் மம்முட்டி நடித்த பிரம்மயுகம் படம் ஒரு ஹாரர் படமாக சொல்லப்பட்ட விதமும் அதில் மம்முட்டியின் நடிப்பும் ரொம்பவே பிரமிக்க வைத்தது. அதே சமயம் தென்னிந்திய படங்கள், அவர்களது ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சமைத்து கொடுக்கின்றன. ஆனால் பாலிவுட் அப்படி அல்ல.. அதன் எல்லை ரொம்பவே பெரியது” என்று கூறியுள்ளார்.