அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
சமீபத்தில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் அனைவருமே யார் இந்துக்கள் என பெயரைக் கேட்டு கேட்டு இந்தக் கொலைச் செயலை நிகழ்த்தி இருப்பதால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சில பேர் இந்த நிகழ்வை காரணமாக வைத்து இஸ்லாமிய சமுதாயத்தில் பிரபலமாக இருக்கும் பலரை குறிவைத்து தங்களது கண்டனங்களை மற்றும் அவதூறு தகவல்களை பரப்பி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஹனுராகவ புடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள 'பவ்ஜி' என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் இமான்வி (இமான்வி இஸ்மாயில்) என்பவரையும் விட்டுவைக்கவில்லை. சோசியல் மீடியாவில் அவர் ஒரு பாகிஸ்தானிய நடிகை என்று கூறியும் அவரை பிரபாஸ் படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சிலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலமாக புகழ்பெற்ற இமான்வி நேரடியாக பிரபாஸ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்த நிலையில் தன் மீது குத்தப்பட்டுள்ள பாகிஸ்தானி என்கிற முத்திரைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் ஒரு இந்திய அமெரிக்க பிரஜை. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்து வளர்ந்தவள். எனக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய உறவினர்கள் யாரும் பாகிஸ்தானிலும் இல்லை. எங்களது குடும்பத்தினர் யாரும் பாகிஸ்தான் ராணுவத்திலும் இல்லை. சிலர் தேவையில்லாமல் என்னை பாகிஸ்தானி என முத்திரை குத்தி வருவது அவர்களின் சுயநலத்தை காட்டுகிறது. இப்படிப்பட்ட ஒரு கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ள நிலைமையில் அனைவரும் ஒன்று சேர்ந்து அதற்காக குரல் கொடுக்க வேண்டுமே, தவிர இதுபோன்று அவதூறான செய்திகளை பரப்பி ஒருவர் மேல் வெறுப்பை உண்டாக்கக் கூடாது” என்று கூறியுள்ளார் நடிகை இமான்வி.