லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
போக்குவரத்து போலீசார் அவ்வப்போது திரைப்படங்களின் போஸ்டர்கள் மற்றும் அதில் இடம்பெறும் காட்சிகளை வைத்து போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'தொடரும்' படத்தின் போஸ்டர் ஒன்றை வைத்து கேரள போலீஸார் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி சோசியல் மீடியாவில் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் மோகன்லால் ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டி செல்கிறார். இதை குறிப்பிட்டு அனைவரும் பாதுகாப்பாக இருக்க ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.
அதே சமயம் மோகன்லால் ரசிகர்கள் பலரும் இதற்கு கிண்டலாக விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதில் கருத்துக்களில் கூறப்பட்டுள்ளதாவது, “இது ஒரு படத்தின் போஸ்டர். மோகன்லால் தான் வண்டி ஓட்டுகிறார் என்பது தெரிய வேண்டும் என்பதற்காக ஹெல்மெட் அணியாமல் இந்த போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல படத்தின் காட்சிப்படி தனது காரை மகனும் அவன் நண்பர்களும் தெரியாமல் எடுத்து ஓட்டி செல்லும் போது அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக அவசரத்திற்கு கிடைத்த தனது நண்பனின் வண்டியை எடுத்துக்கொண்டு காரை விரட்டி செல்வதாக காட்சி. இதில் ஹெல்மெட் எல்லாம் போட அவர் யோசித்துக் கொண்டிருப்பாரா?
அதேசமயம் இதே படத்தில் இன்னொரு காட்சியில் மோகன்லால் கார் ஓட்டிக் கொண்டு வரும்போது, காருக்கு பக்கவாட்டில், அவருக்கு தெரிந்த ஒர்க்ஷாப்பில் வேலை பார்க்கும் பையன் ஹெல்மெட் அணியாமல் மோகன்லாலுடன் பேசிக்கொண்டே டூவீலர் ஓட்டிக்கொண்டு வருவான். அப்போது அவனிடம் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு வண்டி ஓட்டு, அதுதான் பாதுகாப்பு என்று மோகன்லால் சொல்வார். உடனே அந்த இளைஞன் ஹெல்மெட்டை எடுத்து அணிந்து கொள்வார். இதெல்லாம் உங்கள் கண்களுக்கு படவில்லையா” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.