விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
மலையாளத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் தொடரும் என்கிற படம் வெளியானது. தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை மோகன்லாலுடன் மீண்டும் ஜோடியாக நடித்திருந்தார் ஷோபனா. குடும்ப பின்னணியில் ஆரம்பிக்கும் இந்த படத்தின் கதை போகப்போக அப்படியே ஒரு திரில்லர் ஏரியாவுக்குள் நுழைந்து கடைசி முக்கால் மணி நேரம் ரசிகர்களை அசைய விடாமல் கட்டி போட்டு விடும். அதனாலேயே இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது கேரளாவில் மட்டும் 100 கோடி வசூலித்த முதல் படம் என்கிற பெருமையையும் உலக அளவில் 200 கோடியை தாண்டிய படம் என்கிற பெருமையும் பெற்று தற்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்திற்கு பல பிரபலங்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஒருபடி மேலே போய் நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் சென்னையில் உள்ள தங்களது வீட்டிற்கு இயக்குனர் தருண் மூர்த்தியை வரச்செய்து தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது ஜோதிகாவும் உடன் இருந்தார்.
இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் தருண் மூர்த்தி, “உங்களது அழைப்புக்கும் மலையாள சினிமா மீதும் மோகன்லால் சார் மீதும் நீங்கள் வைத்துள்ள அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. தமிழ்நாட்டிலும் தொடரும் அலை தொடர்கிறது” என்று தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.