மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
மலையாளத்தில் இதுவரை வெளியான படங்களில் மோகன்லால் நடித்த எம்புரான், ஷாபின் சாகிர் நடித்த மஞ்சும்மல் பாய்ஸ், டொவினோ தாமஸ் நடித்த 2018 ஆகிய படங்கள் மட்டுமே 200 கோடி வசூலை தாண்டி உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் தருண்மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடித்த தொடரும் படமும் 200 கோடியை தொட்டு அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளது. இன்னொரு திரிஷ்யம் என்று கொண்டாடப்படும் தொடரும் தமிழிலும் டப்பாகி 70க்கும் அதிகமான தியேட்டரில் வெளியாகி உள்ளது.
தனது அம்பாசிடர் காரை காதலிக்கிறார் மோகன்லால். 2 போலீசார் அந்த காரிலேயே மோகன்லாலுக்கு தெரியாமல், அவர் மகன் பிணத்தை ஏற்றி புதைக்கிறார்கள். விஷயமறிந்த அப்பா என்ன செய்தார். மகன் ஏன் கொலை செய்யப்பட்டான் என்பது கதை. இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா, இளவரசு ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் சென்னையில் சினிமா பைட்டராக மோகன்லால் வேலை செய்வதா கதை நகர்கிறது. அவர் மாஸ்டர் பாரதிராஜா. படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய கேரக்டராக போட்டோவில் காண்பிக்கப்படுகிறார். ஆனால் நடிக்கவில்லை.