மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்குமா என்பது ஆச்சரியம்தான். ஒரேநாளில் மூன்று நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக நடித்த படங்கள் மே 16ம் தேதியன்று வெளியாக உள்ளது.
சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்', சூரி நடித்துள்ள 'மாமன்', யோகி பாபு நடித்துள்ள 'ஜோரா கைய தட்டுங்க' ஆகிய படங்கள்தான் அவை. இவற்றில் சந்தானம் நடித்துள்ள படம் ஹாரர் காமெடி படமாகவும், சூரி நடித்துள்ள படம் சென்டிமென்ட் படமாகவும், யோகிபாபு நடித்துள்ள படம் க்ரைம் த்ரில்லர் படமாகவும் உருவாகியுள்ளது.
சந்தானம் கதாநாயகனாக நடிப்பதிலிருந்து தற்போது காமெடியனாகவும் மீண்டும் நடிக்க உள்ளார். யோகிபாபு அவ்வப்போது கதாநாயகனாக நடிப்பார். சூரி இனிமேல் காமெடியனாக நடிப்பாரா என்பது சந்தேகம்தான். இவர்கள் மூவரும் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகைப் படங்களாக உள்ளன. படங்கள் நன்றாக இருந்தால் மூவருமே வெற்றி பெறலாம்.
இவர்களது படங்களுடன் நவீன் சந்திரா, அபிராமி நடித்துள்ள 'லெவன்' படமும் அன்றைய தினம் வெளியாக உள்ளது.