10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் பெண்டாஸ்டிக் போர் | பிளாஷ்பேக் : தணிக்கையில் சிக்கிய பிரபு படம் | பிளாஷ்பேக்: லாவண்யாவை காப்பாற்றிய நடனம் | இந்தாண்டு ‛நம்ம தீபாவளி' : தீபாவளிக்கு வெளியாகும் ‛லெஜெண்ட்' சரவணனின் புதிய படம் | சண்டை ஒரு பக்கம் இருந்தாலும் அண்ணனின் கண்ணப்பா படத்துக்கு தம்பி பாராட்டு | ராஷ்மிகா கொடுத்த வாய்ப்பை கோட்டை விட்ட ரசிகர்கள் | கோவிலுக்கு வந்த நடிகர் ஜெயசூர்யாவை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் மீது தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி | சுரேஷ் கோபி பட டைட்டில் பிரச்னையில் சென்சார் போர்டுக்கு நீதிமன்றம் கேள்வி | ஐமேக்ஸில் வெளியாகும் வார் 2 | நியூமராலஜிபடி பெயரில் திருத்தம் செய்த மீனாட்சி சவுத்ரி |
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்குமா என்பது ஆச்சரியம்தான். ஒரேநாளில் மூன்று நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக நடித்த படங்கள் மே 16ம் தேதியன்று வெளியாக உள்ளது.
சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்', சூரி நடித்துள்ள 'மாமன்', யோகி பாபு நடித்துள்ள 'ஜோரா கைய தட்டுங்க' ஆகிய படங்கள்தான் அவை. இவற்றில் சந்தானம் நடித்துள்ள படம் ஹாரர் காமெடி படமாகவும், சூரி நடித்துள்ள படம் சென்டிமென்ட் படமாகவும், யோகிபாபு நடித்துள்ள படம் க்ரைம் த்ரில்லர் படமாகவும் உருவாகியுள்ளது.
சந்தானம் கதாநாயகனாக நடிப்பதிலிருந்து தற்போது காமெடியனாகவும் மீண்டும் நடிக்க உள்ளார். யோகிபாபு அவ்வப்போது கதாநாயகனாக நடிப்பார். சூரி இனிமேல் காமெடியனாக நடிப்பாரா என்பது சந்தேகம்தான். இவர்கள் மூவரும் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகைப் படங்களாக உள்ளன. படங்கள் நன்றாக இருந்தால் மூவருமே வெற்றி பெறலாம்.
இவர்களது படங்களுடன் நவீன் சந்திரா, அபிராமி நடித்துள்ள 'லெவன்' படமும் அன்றைய தினம் வெளியாக உள்ளது.