தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த மே 16ம் தேதி திரைக்கு வந்த படம் 'மாமன்'. பாஸிடீவான விமர்சனங்களை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 35.90 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் தனது அக்காவாக நடித்த சுவாசிகாவின் நடிப்பு குறித்து இணையப் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார் சூரி.
அந்த பதிவில், 'என் அன்பும் நன்றிகளும் கிரிஜா அக்காவுக்கு. மாமன் படத்தில் உங்கள் நடிப்பு என் மனதை ஆழமாக கவர்ந்தது. அக்கா, லட்டு அம்மா, மகள், மனைவி ஒவ்வொரு வேடத்திலும் நீங்கள் காட்டிய திறமை ஒளிர்ந்தது. நீங்கள் நடித்த ஒவ்வொரு காட்சிகளிலும் உண்மையான உணர்வுகள் இருந்தன. அதுதான் இப்படத்தின் சிறப்பு. உங்களுடன் இணைந்து நடித்தது எனக்கு நல்ல அனுபவமாகவும் போட்டியாகவும் இருந்தது. இந்திய சினிமாவுக்கு கிடைத்த அரிய செல்வம் நீங்கள். உங்களிடமிருந்து கற்கும் இந்த பயணம் தொடரும்,' என்று பதிவிட்டுள்ளார் சூரி.
அதே போன்று பால சரவணன் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி இனிவரும் காலங்களில் எந்த கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து மிகச் சிறந்த நடிகராக உயர்வார் தம்பி பால சரவணன். மாமன் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவர் வந்ததாக சொன்னீர்கள். அது உண்மைதான். ஆனால் அவர் வந்த குறைந்த காட்சிகளிலும் அனைவரது மனதையும் கவர்ந்து விட்டார். இதை யாராலும் மறுக்க முடியாது. நான் தம்பி பாலாவின் மிகப்பெரிய ரசிகன். எனக்கு ஆதரவாக தூணாக அவர் இருந்தார். இன்னும் பல படங்களில் அவருடன் வேலை செய்ய வேண்டும். என் அன்பும் நன்றியும் தம்பி,' என பால சரவணன் குறித்தும் பதிவிட்டுள்ளார் சூரி.