பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த மே 16ம் தேதி திரைக்கு வந்த படம் 'மாமன்'. பாஸிடீவான விமர்சனங்களை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 35.90 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் தனது அக்காவாக நடித்த சுவாசிகாவின் நடிப்பு குறித்து இணையப் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார் சூரி.
அந்த பதிவில், 'என் அன்பும் நன்றிகளும் கிரிஜா அக்காவுக்கு. மாமன் படத்தில் உங்கள் நடிப்பு என் மனதை ஆழமாக கவர்ந்தது. அக்கா, லட்டு அம்மா, மகள், மனைவி ஒவ்வொரு வேடத்திலும் நீங்கள் காட்டிய திறமை ஒளிர்ந்தது. நீங்கள் நடித்த ஒவ்வொரு காட்சிகளிலும் உண்மையான உணர்வுகள் இருந்தன. அதுதான் இப்படத்தின் சிறப்பு. உங்களுடன் இணைந்து நடித்தது எனக்கு நல்ல அனுபவமாகவும் போட்டியாகவும் இருந்தது. இந்திய சினிமாவுக்கு கிடைத்த அரிய செல்வம் நீங்கள். உங்களிடமிருந்து கற்கும் இந்த பயணம் தொடரும்,' என்று பதிவிட்டுள்ளார் சூரி.
அதே போன்று பால சரவணன் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி இனிவரும் காலங்களில் எந்த கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து மிகச் சிறந்த நடிகராக உயர்வார் தம்பி பால சரவணன். மாமன் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவர் வந்ததாக சொன்னீர்கள். அது உண்மைதான். ஆனால் அவர் வந்த குறைந்த காட்சிகளிலும் அனைவரது மனதையும் கவர்ந்து விட்டார். இதை யாராலும் மறுக்க முடியாது. நான் தம்பி பாலாவின் மிகப்பெரிய ரசிகன். எனக்கு ஆதரவாக தூணாக அவர் இருந்தார். இன்னும் பல படங்களில் அவருடன் வேலை செய்ய வேண்டும். என் அன்பும் நன்றியும் தம்பி,' என பால சரவணன் குறித்தும் பதிவிட்டுள்ளார் சூரி.