வில்லன் ஆன ஒளிப்பதிவாளர் | ஆண்ட்ரியா பட வழக்கு: தணிக்கை குழுவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு | நிர்வாகிகள் பதவி காலம் நீட்டிப்பு ஏன்? கோர்ட்டில் விஷால் விளக்கம் | ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சேகர் கம்முலா. தற்போது தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'குபேரா' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் பான் இந்தியா படமாக ஜுன் 20ம் தேதி வெளியாக உள்ளது. சேகர் கம்முலா திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதை முன்னிட்டு சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்றார். “பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்த ஆளுமை சிரஞ்சீவி,” எனக் குறிப்பிட்டிருந்தார் சேகர்.
சேகர் கம்முலாவை வாழ்த்தி அவருக்கு பேனா ஒன்றை பரிசளித்த சிரஞ்சீவி அவர் குறித்து தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “என் அன்பான சேகர், உங்களைப் போன்ற ஒரு ரசிகர் எனக்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பயணத்தை நான் ஊக்கப்படுத்தியதை அறிந்து நான் இன்னும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வழியில் உங்கள் 25 ஆண்டுகால பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். நுட்பமான பொழுதுபோக்குடன் சமூக விமர்சனமும் சேர்க்கப்பட்ட சிந்தனை மிக்க உங்கள் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
திரைப்படத் தயாரிப்பில் நீங்கள் ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கியுள்ளீர்கள், மேலும் நீங்கள் இன்னும் 25 ஆண்டுகள் 'எழுதுதல்', தயாரித்தல் மற்றும் பல பெரிய உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன். இந்த அற்புதமான மைல்கல்லுக்கு வாழ்த்துக்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் அடுத்த 25 ஆண்டுகள் மகிமையுடன் அமைய வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்,” என வாழ்த்தியுள்ளார்.