நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சேகர் கம்முலா. தற்போது தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'குபேரா' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் பான் இந்தியா படமாக ஜுன் 20ம் தேதி வெளியாக உள்ளது. சேகர் கம்முலா திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதை முன்னிட்டு சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்றார். “பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்த ஆளுமை சிரஞ்சீவி,” எனக் குறிப்பிட்டிருந்தார் சேகர்.
சேகர் கம்முலாவை வாழ்த்தி அவருக்கு பேனா ஒன்றை பரிசளித்த சிரஞ்சீவி அவர் குறித்து தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “என் அன்பான சேகர், உங்களைப் போன்ற ஒரு ரசிகர் எனக்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பயணத்தை நான் ஊக்கப்படுத்தியதை அறிந்து நான் இன்னும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வழியில் உங்கள் 25 ஆண்டுகால பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். நுட்பமான பொழுதுபோக்குடன் சமூக விமர்சனமும் சேர்க்கப்பட்ட சிந்தனை மிக்க உங்கள் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
திரைப்படத் தயாரிப்பில் நீங்கள் ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கியுள்ளீர்கள், மேலும் நீங்கள் இன்னும் 25 ஆண்டுகள் 'எழுதுதல்', தயாரித்தல் மற்றும் பல பெரிய உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன். இந்த அற்புதமான மைல்கல்லுக்கு வாழ்த்துக்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் அடுத்த 25 ஆண்டுகள் மகிமையுடன் அமைய வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்,” என வாழ்த்தியுள்ளார்.