லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
உலகெங்கிலும் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் அவர்களைப் போலவே தத்ரூபமாக மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டு வருகின்றன. அப்படி தெலுங்கு நடிகர்களில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோரின் மெழுகு சிலைகள் ஏற்கனவே இப்படி மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் இடம் பிடித்துள்ளன.
அந்த வகையில் தற்போது ராம்சரணின் மெழுகு சிலையும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. வரும் மே ஒன்பதாம் தேதி மாலை 6:15 மணிக்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் அவரது மெழுகுசிலை திறந்து வைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியத்திற்கு அது கொண்டு சென்று வைக்கப்பட இருக்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் ராம்சரணுடன் செல்லமாக தான் வளர்த்து வருகின்ற ரைம் என்கிற நாய்க்குட்டியையும் அவர் தனது கைகளில் வைத்திருப்பது போல சேர்த்து மெழுகு சிலையாக வடித்து உள்ளார்களாம். இதற்கு முன்னதாக இரண்டாம் ராணி எலிசபெத் தனது செல்லப்பிராணியான கார்கியை தன் கைகளில் வைத்திருப்பது போன்ற சிலை இடம்பெற்றிருந்தது. அவருக்குத்தான் முதன் முதலில் இப்படி ஒரு மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டதாம். அதற்கு அடுத்து இந்தியாவிலேயே முதன்முறையாக, உலக அளவில் இரண்டாவதாக இந்தப் பெருமை ராம்சரணுக்கும் அவரது செல்லப்பிராணிக்கும்தான் கிடைத்துள்ளதாம்.