பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித் | மூன்றாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நயன்தாரா? | மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் |
டாக்ஸிக், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடன்ட்ஸ், மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில், தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் நயன்தாராவை அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு 18 கோடி நயன்தாரா சம்பளம் கேட்டதாகவும் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு பேச்சுவார்த்தை நடப்பதாகவும் டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 2026ம் ஆண்டு சங்கராந்திக்கு இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள். மேலும் இந்த படத்தில் நயன்தாரா இணையும் பட்சத்தில் சைரா நரசிம்மரெட்டி, காட்பாதர் படங்களுக்கு பிறகு சிரஞ்சீவியுடன் அவர் இணையும் மூன்றாவது படம் இதுவாக இருக்கும்.