இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தெலுங்கு நடிகரான சர்வானந்த், ‛எங்கேயும் எப்போதும்' போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர் தான். தற்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர். தமிழிலும் அவ்வப்போது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் வரலாற்று படத்தில் சர்வானந்த் நடிக்கிறார். இது அவரின் 38வது படமாக உருவாகிறது. பெங்கால் டைகர் படத்தை இயக்கிய சம்பத் நந்தி இப்படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகிய இருவரும் இணைந்துள்ளனர் என படக்குழு அறிவித்துள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.