'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
கடந்த 2011ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த். அதைத்தொடர்ந்து ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை கடந்த வருடம் வெளியான கணம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004-ல் தெலுங்கில் கௌரி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமான ஷர்வானந்த் திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருட பயணத்தை முடித்துள்ளார். ஷர்வானந்த்துக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகர் ஜங்ஷனில் ஷர்வானந்த் பயணித்த கார் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ஷர்வானந்த் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட காரில் பயணித்தவர்களுக்கும் சாலையில் சென்றவர்களுக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும், காருக்கு மட்டுமே சிறிய அளவிலான கீறல் ஏற்பட்டதாகவும் ஷர்வானந்த் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.