Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை

08 ஏப், 2025 - 08:56 IST
எழுத்தின் அளவு:
My-mother-is-the-reason-I-left-with-only-one-film-Mammoottys-film-actress-opens-up

மலையாளத்தில் கடந்த 2003ல் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் பட்டாளம். பிரபல இயக்குனர் லால் ஜோஸ் இயக்கியிருந்தார். கதாநாயகியாக இந்த படத்தின் மூலம் டெஸ்ஸா ஜோசப் என்பவர் அறிமுகம் ஆனார். மலையாள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கேள்விப்பட்டு அந்த கிராமத்திற்கு பாதுகாப்பாக ராணுவம் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படி வரும் ராணுவ அதிகாரியான மம்முட்டிக்கும் அங்கு உள்ள இளம் விதவையான டெஸ்ஸா ஜோசப்புக்கும் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் தனது கணவர் மரணத்திற்கு மம்முட்டி தான் காரணம் என தெரியவர இறுதியில் என்ன நடக்கிறது என கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் டெஸ்ஸா ஜோசப். ஆனால் ஆச்சரியமாக இந்த ஒரே ஒரு படத்துடன் அவர் சினிமாவை விட்டு ஒதுங்கினார். அதன் பிறகு 2015ல் மீண்டும் சினிமாவில் நுழைந்தவர் ஒரு சில படங்களில் நடித்தார். அதுவும் கை கொடுக்காத நிலையில் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற தலைவன் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் ரீ என்ட்ரி என்று கொடுத்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் டெஸ்ஸா ஜோசப் கூறும்போது, “நான் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் சினிமா குறித்த பல தவறான தகவல்கள் வெளிப்படையாக பேசப்பட்டு வந்தன. நான் படத்தில் நடித்த காலகட்டத்திலேயே சில விஷயங்களை கேட்டதாலும் சில விஷயங்களை கண்கூடாக பார்த்ததாலும் என்னுடைய தாயார் டென்ஷன் ஆனார். என்னுடைய முதல் படம் வெற்றி படமாக அமைந்தாலும் கூட அதன் பிறகு சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று கூறி அந்த படம் வெளியான பிறகு வந்த முதல் கல்யாண சம்பந்தத்தையே எனக்கு பேசி முடித்து விட்டார்.

அதன்பிறகு திருமண வாழ்க்கை, குழந்தைகள் பராமரிப்பு என்று போய்விட்டது. ஆனால் மீண்டும் சினிமாவில் நடிக்கலாமே என்கிற எண்ணம் வந்தபோது அதற்கான வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக கைகூடி வரவில்லை. சினிமா நிறைய மாறி இருந்தது. கடந்த வருடம் வெளியான தலைவன் படம் என்னை மீண்டும் மலையாளத்திற்கு அழைத்து வந்தாலும் பட்டாளம் படத்தில் நான் நடித்த விமலா என்கிற கதாபாத்திரமாக தான் இப்போதும் மலையாள ரசிகர்கள் என்னை பார்க்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மைதாத்தா ஆனார் பிரியதர்ஷன் : ... மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in