தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்களில் மோகன்லால் மம்முட்டிக்கு அடுத்தபடியாக தற்போதும் ஆக்டிவாக நடித்து வருபவர் நடிகர் திலீப். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் 'எம்புரான்' ரிலீஸ் ஆக, நாளை (ஏப்.,10) மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'பஷூக்கா' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த பரப்புரப்புகள் அடங்கிய பின்னர் நடிகர் திலீப் நடித்துள்ள 'பிரின்ஸ் அன்ட் பேமிலி' திரைப்படம் வரும் மே 9ம் தேதி சம்மர் விடுமுறையை குறிவைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது. திலீப்பின் 150வது படம் இது என்பது ஹைலைட். தொடர்ந்து ஆக்சன் மற்றும் சீரியசான கதைக்களங்களில் நடித்து வந்த திலீப்பின் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது என்பது படத்தின் டைட்டிலை பார்த்தாலே தெரியும்.
இந்த படத்தில் திலீப்புக்கு அடுத்ததாக முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் தியான் சீனிவாசன் மற்றும் நடிகை ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். ஆச்சரியமாக இந்த படத்தில் திலீப்புக்கு ஜோடி இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை பின்ட்டோ ஸ்டீபன் என்பவர் இயக்கியுள்ளார். பிரித்விராஜ் நடிப்பில் கவனம் ஈர்த்த 'ஜனகணமன' படத்திற்கு கதை எழுதிய ஷரிஸ் முகமது தான் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார் என்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. கடந்த சில நாட்களாக நடிகர் திலீப் சம்பந்தப்பட்ட பிரபல நடிகை கடத்தல் வழக்கு ஒன்று மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில் அதை ஓவர்கம் செய்து திலீப்புக்கு இந்த படம் ஒரு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.