பிளாஷ்பேக்: விஷம் அருந்தி வெள்ளித்திரை வாய்ப்பினைப் பெற்ற ஜே பி சந்திரபாபு | கமல்ஹாசன் சொத்து ரூ.305 கோடி, கடன் ரூ.49 கோடி | ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் |
நடிகர் தனுஷ் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் ' நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' . இதில் அவரின் அக்கா மகன் பவிஷ் நாராயணன் என்பவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்தனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றன. படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதை படம் பூர்த்தி செய்யவில்லை. இதனால் படம் சுமாரான வசூலை பெற்றது.
இந்நிலையில் பவிஷ் அடுத்து கதாநாயகனாக நடிக்க தனுஷ் ஒருபுறம் கதை கேட்டு வருகிறார். மறுபுறம் 20க்கும் மேற்பட்ட இயக்குனர்களரிடம் கதை கேட்டுள்ளார் பவிஷ். இந்த படத்தையும் தனுஷ், அவரது வுண்டர் பார் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பார் என்கிறார்கள்.