தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது கோவை, அதன் சுற்றுவட்டாரம் மற்றும் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திலும் அதே டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கும் நிலையில், அவரது மருமகளாக முதல் பாகத்தில் நடித்த மிர்னா மேனன் மீண்டும் நடித்து வருகிறார். அதேபோல் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ரம்யா கிருஷ்ணனும் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.
இது குறித்த தகவலை அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், ஜெயிலர்-2 படப்பிடிப்பில் கடந்த பத்தாம் தேதி தான் கலந்து கொண்டதாகவும், அதே நாள்தான் ரஜினியுடன் தான் இணைந்து நடித்த படையப்பா படத்தின் 26வது ஆண்டு நாள் என்றும் தெரிவித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன், படையப்பா 26வது ஆண்டு நாளில் மீண்டும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினியுடன் இணைந்தது மகிழ்ச்சி என்றும் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனனை தொடர்ந்து யோகி பாபுவும் ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த அதே வேடத்தில் நடிக்கும் நிலையில், எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கிறார்.