மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' |
அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைக்கு வந்து வசூலை குவித்து வரும் படம் ‛புஷ்பா 2'. இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிலையில், அவரது மகன் ஸ்ரீதேஜ் என்பவர் படுகாயம் அடைந்து செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுன் கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இந்த சிறுவனை ஐந்தாம் தேதி நேரில் சென்று பார்க்க அல்லு அர்ஜுன் தயாரான போது, காவல்துறை அவருக்கு தடை விதித்திருந்தது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு அல்லு அர்ஜுன்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்கள். என்றாலும் அதையடுத்து காவல்துறை அதிகாரிகள் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்று, இன்றைய தினம் கிம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அந்த சிறுவனின் உடல் நிலை குறித்து விசாரித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
அப்போது மருத்துவமனையில் 20 நிமிடங்கள் இருந்துள்ள அல்லு அர்ஜுன், சிறுவனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடத்தில் கேட்டறிந்தார் . அல்லு அர்ஜுன் கிம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியிருக்கிறது.