எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
நடிகை ஹன்சிகா மோத்வானி மும்பையில் இருந்து தமிழுக்கு வந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இங்கே சிம்புவுடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி பிறகு அதிலிருந்து வெளிவந்தார். கடந்த சில வருடங்களாகவே பட வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை கடந்த 2022ல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியின் மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸ் என்பவர் ஹன்சிகா மற்றும் அவரது அம்மா மோனா மோத்வானி ஆகியோருடன் தனது கணவரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதாக தற்போது மும்பை அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து கிட்டத்தட்ட நான்கு பிரிவுகளில் கீழ் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020ல் பிரசாந்த்-முஸ்கான் திருமணம் நடைபெற்றது. அதே சமயம் 2022லேயே இந்த குடும்ப டார்ச்சர் காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார் முஸ்கான் நான்சி ஜேம்ஸ். இந்த நிலையில் தான் தற்போது தனது கணவரின் குடும்பத்திற்கு எதிராக இப்படி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இடையில் தனது கணவருடன் முஸ்கான் சமரசமாக செல்ல விரும்பி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு ஹன்சிகா மற்றும் அவரது அம்மா இருவரும் குறுக்கீடு செய்து முட்டுக்கட்டை போட்டதாகவும் அதன் விளைவாகவே இப்படி ஒரு புகாரை முஸ்கான் அளித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.