காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கடந்த ஒரு மாத காலமாக இன்ஸ்டாகிராமில் எந்த பதிவுகளும் வெளியிடாமல் இருந்த ஹன்சிகா நேற்று மும்பையில் உள்ள தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில், அழகாக அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை படங்கள் இடம் பெற்றுள்ளது. அதோடு எனது பாப்பாவை வீட்டிற்கு வரவேற்கிறோம். கணபதி பாப்பா மோரியா என்று ஒரு பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் ஹன்சிகாவின் கணவர் இடம்பெறவில்லை. கடந்த 2022ம் ஆண்டில் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, 2024 ஆம் ஆண்டில் தங்களது இரண்டாவது திருமண நாளை கணவருடன் கொண்டாடினார். சமீபகாலமாக அவர் கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், இதுவரை அதற்கு ஹன்சிகா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. விநாயகர் சதுர்த்தி விழாவையும் அவர் தனிமையில் கொண்டாடி இருப்பது அந்த செய்தியை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.