'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது |
தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பிறகு வேலாயுதம், சிங்கம்- 2, மான்கராத்தே, வாலு என பல படங்களில் நடித்தார். சிம்புவுடன் வாலு படத்தில் நடித்து வந்தபோது அவர்கள் இருவரும் காதலித்த நிலையில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டார்கள். ஆனால், கடைசி நேரத்தில் அந்த திருமணம் தடைபட்டது.
இந்த நிலையில் 2022ம் ஆண்டில் தனது தோழியை திருமணம் செய்து கொண்டு விவாகரத்தான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா. ஆனால் திருமணமாகி 3 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது சோஹைல் கத்தூரியாவை பிரிந்து வாழ்ந்து வருகிறாராம் ஹன்சிகா. ஆனால் சமீபத்தில் இதை சோஹைல் மறுத்தார்.
இந்நிலையில் சோஹைல் உடன் இருந்த திருமண போட்டோ மற்றும் இருவரும் ஜோடியாக இருந்த போட்டோக்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார் ஹன்சிகா. மேலும் அவரை அன்பாலோவும் செய்துள்ளார். இதனால் இவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது தீவிரமாகி உள்ளது. அதுமட்டுல்ல விவாகரத்து கோரி ஹன்சிகா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.