Advertisement

சிறப்புச்செய்திகள்

32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புக்கட் தீவில் கீர்த்தி சுரேஷ் ஜாலி ட்ரிப் ; கணவருடனான புகைப்படம் எங்கே ?

07 ஜன, 2025 - 02:10 IST
எழுத்தின் அளவு:
Keerthy-Sureshs-Jolly-Trip-to-Phuket-Island-Where-is-the-photo-with-her-husband


மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்த நிலையில் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் இங்கே முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர் தெலுங்கிற்கு சென்று அங்கே 'மகாநடி' படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெரும் அளவிற்கு உயர்ந்தார். அதன் பயனாக தற்போது பாலிவுட்டிலும் நுழைந்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த 'பேபி' ஜான் திரைப்படம் ஹிந்தியில் வெளியானது. இன்னொரு பக்கம் தனது நீண்ட கால நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் கீர்த்தி சுரேஷ்.

பேபி ஜான் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த அவர், தற்போது முதன் முறையாக திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டு பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். அங்கே புக்கட் தீவில் ஜாலியாக சுற்றித் திரியும் புகைப்படங்களையும் சில வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அங்கே ஒரு ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்து பயணிக்கும் ஒரு வீடியோவையும் கூட வெளியிட்டுள்ளார். ஆனால் இத்தனை புகைப்படங்களில் ஒன்றில் கூட தனது கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை அவர் வெளியிடவில்லையே என ரசிகர்கள் அவரைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாத்தனாரை கொடுமைப்படுத்தியதாக ஹன்சிகா மற்றும் குடும்பத்தினர் மீது போலீசில் புகார்நாத்தனாரை கொடுமைப்படுத்தியதாக ... கார் பந்தயத்துக்காக துபாய்க்கு புறப்பட்டு சென்ற அஜித் கார் பந்தயத்துக்காக துபாய்க்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)