தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள அஜித் குமார், இந்த இரண்டு படங்களிலும் தனக்கான டப்பிங்கை பேசி முடித்து விட்டார். இந்த நிலையில், பொங்கலுக்கு திரைக்கு வர இருந்த விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், குட் பேட் அக்லி படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படியான நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை குடும்பத்துடன் வெளிநாட்டில் கொண்டாடிய அஜித், கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக துபாய்க்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அவரை அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன், மகள் ஆகியோர் வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்போது எமோஷனலாக காணப்பட்ட அஜித், மனைவி, பிள்ளைகளை கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்திவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். அது குறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவை போலவே கார் பந்தயத்திலும் அஜித் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.