22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
தமிழ் சினிமாவில் இயல்பான நடிகர் எனப் பெயரெடுத்தவர் மறைந்த நடிகர் முரளி. கன்னட இயக்குனர் சித்தராலிங்கையாவின் மகன். 1984ல் வெளிவந்த 'பூ விலங்கு' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தனது 46வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
முரளியின் மூத்த மகனான அதர்வா, 'பாணா காத்தாடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அவரது இளைய மகன் ஆகாஷ் முரளி ஜனவரி 14ல் வெளியாக உள்ள 'நேசிப்பாயா' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
முரளி அறிமுகமான 'பூ விலங்கு' படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. அதர்வா அறிமுகமான 'பாணா காத்தாடி' படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜாவின் மகன் யுவன்ஷங்கர் ராஜா. தற்போது ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகப் போகும் 'நேசிப்பாயா' படத்திற்கும் யுவன் தான் இசை. முரளி குடும்பத்தில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு இளையராஜா குடும்பத்தினர் இசையமைத்திருப்பது ஒரு ஆச்சரிய ஒற்றுமை.