32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
அமரன் படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதைத்தொடர்ந்து சுதா கெங்கரா, சிபி சக்ரவர்த்தி இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் அளித்துள்ள ஒரு பேட்டியில், விரைவில் ஹிந்தி சினிமாவில் தான் அறிமுகமாக போவதாக தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பாலிவுட் நடிகர் அமீர்கான் என்னை அழைத்து தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிக்குமாறு கூறியிருந்தார் . அது குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. ஆனால் அப்போது அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. என்றாலும் தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்ததும் அமீர்கான் தயாரிக்கும் படத்தில் நடிக்கப்போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில், தமிழ் சினிமாயில் இருந்து தனுஷ் அவ்வப்போது ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயனும் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போகிறார்.