ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை |
தமிழில் 'சிங்கம் புலி, பட்டாம்பூச்சி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஹனிரோஸ். தொடர்ந்து மலையாள படங்களில் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் கதையம்சம் கொண்ட வித்தியாசமான படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபகாலமாகவே தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார் ஹனிரோஸ். “இதுநாள் வரை அமைதியாக இருந்த நான் இப்போது சட்டம் பெண்களுக்காக என்னென்ன பாதுகாப்பு உரிமைகளை வழங்கியுள்ளதோ அதையெல்லாம் முழுமையாக படித்துவிட்டு இது போன்ற சைபர் கிரைம் ஆசாமிகள் மீது சட்டரீதியான போரை துவங்கியுள்ளேன்” என்று சமீபத்தில் கூறியவர், ஞாயிறு இரவு எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் 30 நபர்கள் மீது புகார் அளித்தார்.
இதன் உடனடி நடவடிக்கையாக தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் போலீசார். மேலும் இதற்கு முன் ஹனிரோஸ் கூறியபோது, செல்வாக்கு மிக்க வசதி படைத்த ஒருவர் தன்னை தொடர்ந்து தேவையில்லாமல் பொது வெளியில் களங்கப்படுத்தி வருகிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அவர் மீதும் காவல்துறையில் தற்போது புகார் அளித்துள்ளார். விரைவில் அந்த நபரும் கைது செய்யப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.