ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
தமிழில் 'சிங்கம் புலி, பட்டாம்பூச்சி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஹனிரோஸ். தொடர்ந்து மலையாள படங்களில் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் கதையம்சம் கொண்ட வித்தியாசமான படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபகாலமாகவே தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார் ஹனிரோஸ். “இதுநாள் வரை அமைதியாக இருந்த நான் இப்போது சட்டம் பெண்களுக்காக என்னென்ன பாதுகாப்பு உரிமைகளை வழங்கியுள்ளதோ அதையெல்லாம் முழுமையாக படித்துவிட்டு இது போன்ற சைபர் கிரைம் ஆசாமிகள் மீது சட்டரீதியான போரை துவங்கியுள்ளேன்” என்று சமீபத்தில் கூறியவர், ஞாயிறு இரவு எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் 30 நபர்கள் மீது புகார் அளித்தார்.
இதன் உடனடி நடவடிக்கையாக தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் போலீசார். மேலும் இதற்கு முன் ஹனிரோஸ் கூறியபோது, செல்வாக்கு மிக்க வசதி படைத்த ஒருவர் தன்னை தொடர்ந்து தேவையில்லாமல் பொது வெளியில் களங்கப்படுத்தி வருகிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அவர் மீதும் காவல்துறையில் தற்போது புகார் அளித்துள்ளார். விரைவில் அந்த நபரும் கைது செய்யப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.