மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ் படங்களின் கதைகள் வடநாட்டில் நடந்தாலும் அங்கும் தமிழ் பாடல்கள்தான் வைக்கப்படும். ஆனால் எல்லாமும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மகேந்திரன் தனது 'நண்டு' படத்தில் இரண்டு ஹிந்தி பாடல்களை வைத்தார். படத்தின் கதைப்படி நாயகன் லக்னோவை சேர்ந்தவர். அவரது குடும்பம் அங்கு பெரிய பணக்கார குடும்பம், ஆனால் நாயகனுக்கு ஆஸ்துமா நோய் இருப்பதால் அந்த குடும்பமே அவரை புறக்கணிக்கிறது. அதனால் மனம் வெறுத்து ஆறுதலுக்காக சென்னை வரும் நாயகன் இங்கு அஸ்வினியை காதலித்து திருமணம் செய்வது மாதிரியான கதை.
நாயகனின் குடும்ப சூழலை காட்டும் காட்சிகள் லக்னோவிலேயே படமாக்கப்பட்டது. 'கெய்சே கஹோன்...', 'ஹம் ஹய் அகிலே..' என தொடங்கும் இரண்டு ஹிந்தி பாடல்கள் இடம் பெற்றது. இரண்டுமே சூப்பர் ஹிட்டானது. 'அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா...' பாடல் தமிழில் ஹிட் ஆனது. இளையராஜா இசை அமைத்திருந்தார். சிவசங்கரி எழுதிய நாவல் அந்த பெயரிலேயே படமானது. ஆனால் படம் தோல்வி அடைந்தது.