டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் படங்களின் கதைகள் வடநாட்டில் நடந்தாலும் அங்கும் தமிழ் பாடல்கள்தான் வைக்கப்படும். ஆனால் எல்லாமும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மகேந்திரன் தனது 'நண்டு' படத்தில் இரண்டு ஹிந்தி பாடல்களை வைத்தார். படத்தின் கதைப்படி நாயகன் லக்னோவை சேர்ந்தவர். அவரது குடும்பம் அங்கு பெரிய பணக்கார குடும்பம், ஆனால் நாயகனுக்கு ஆஸ்துமா நோய் இருப்பதால் அந்த குடும்பமே அவரை புறக்கணிக்கிறது. அதனால் மனம் வெறுத்து ஆறுதலுக்காக சென்னை வரும் நாயகன் இங்கு அஸ்வினியை காதலித்து திருமணம் செய்வது மாதிரியான கதை.
நாயகனின் குடும்ப சூழலை காட்டும் காட்சிகள் லக்னோவிலேயே படமாக்கப்பட்டது. 'கெய்சே கஹோன்...', 'ஹம் ஹய் அகிலே..' என தொடங்கும் இரண்டு ஹிந்தி பாடல்கள் இடம் பெற்றது. இரண்டுமே சூப்பர் ஹிட்டானது. 'அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா...' பாடல் தமிழில் ஹிட் ஆனது. இளையராஜா இசை அமைத்திருந்தார். சிவசங்கரி எழுதிய நாவல் அந்த பெயரிலேயே படமானது. ஆனால் படம் தோல்வி அடைந்தது.




