எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் படங்களின் கதைகள் வடநாட்டில் நடந்தாலும் அங்கும் தமிழ் பாடல்கள்தான் வைக்கப்படும். ஆனால் எல்லாமும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மகேந்திரன் தனது 'நண்டு' படத்தில் இரண்டு ஹிந்தி பாடல்களை வைத்தார். படத்தின் கதைப்படி நாயகன் லக்னோவை சேர்ந்தவர். அவரது குடும்பம் அங்கு பெரிய பணக்கார குடும்பம், ஆனால் நாயகனுக்கு ஆஸ்துமா நோய் இருப்பதால் அந்த குடும்பமே அவரை புறக்கணிக்கிறது. அதனால் மனம் வெறுத்து ஆறுதலுக்காக சென்னை வரும் நாயகன் இங்கு அஸ்வினியை காதலித்து திருமணம் செய்வது மாதிரியான கதை.
நாயகனின் குடும்ப சூழலை காட்டும் காட்சிகள் லக்னோவிலேயே படமாக்கப்பட்டது. 'கெய்சே கஹோன்...', 'ஹம் ஹய் அகிலே..' என தொடங்கும் இரண்டு ஹிந்தி பாடல்கள் இடம் பெற்றது. இரண்டுமே சூப்பர் ஹிட்டானது. 'அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா...' பாடல் தமிழில் ஹிட் ஆனது. இளையராஜா இசை அமைத்திருந்தார். சிவசங்கரி எழுதிய நாவல் அந்த பெயரிலேயே படமானது. ஆனால் படம் தோல்வி அடைந்தது.