மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |
அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா 2' படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு கோடிக் கணக்கில் பணம் செலவு செய்து தயாரிப்பாளர்கள் விளம்பரம் செய்திருந்தார்கள். ஆனால் அதை விட பெரிய விளம்பரத்தை, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம் கொடுத்திருக்கிறது. இப்படியே போனால் படம் 2 ஆயிரம் கோடி வசூலித்து விடும் என்கிறார்கள்.
படம் வெளியாவதற்கு முதல் நாள் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியான படத்தை பார்க்க அல்லு அர்ஜுன் நேரடியாக சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது மகன் ஆஸ்பத்திரியில் ஆபத்தான் முறையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அல்லுஅர்ஜுனை கைது செய்தனர், 14 மணி நேரத்திற்கு பிறகு அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அல்லு அர்ஜுனின் ஜாமினை எதிர்த்து தெலுங்கானா போலீசார் உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர்.
தெலுங்கானா முதல்வரும் இந்த விஷயத்தில அல்லு அர்ஜூனை நேரடியாகவே எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நேற்று மாலை ஒரு கும்பல் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. மேலும் தக்காளியையும் வீசி எறிந்தனர். இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த பூந்தொட்டிகள் சேதம் அடைந்தன. மேலும் அவர்கள் அல்லு அர்ஜுனுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். அர்ஜுன் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதல் நடந்தபோது அல்லு அர்ஜுன் வீட்டில் யாரும் இல்லை.