32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் 'மிஸ்டர்.பாரத்'. யு டியூபில் பிரபலமான பாரத் என்ற புதுமுகம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தை நிரஞ்சன் எழுதி இயக்குகிறார். சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர் ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பிரணவ் முனிராஜ் இசை அமைக்கிறார். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
1986ம் ஆண்டு வெளியான ரஜினி படத்தின் டைட்டிலான 'மிஸ்டர்.பாரத்' பெயரிலியே இந்த படம் தயாராகிறது. ரஜினி படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து. இந்த படம், அந்த படத்தின் தொடர்ச்சி, ரீமேக் என்ற தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குனார் நிரஞ்சன் கூறும்போது, “இது மிகவும் எளிமையான கதைக்களம். கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதை நகரும். பிடிவாதமான குணம் கொண்ட ஒருவன் காதல் திருமணத்தை விரும்புகிறான். ஆனால், ஒரு பெண்ணே முன் வந்து அவனிடம் காதல் சொல்லும்போது அதை அவனால் உணரக்கூட முடியவில்லை.
இது நிறைய ஆச்சரியங்களைக் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் படம். மற்றபடி ரஜினி சாரின் மிஸ்டர்.பாரத் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. தலைப்பை பயன்படுத்த அனுமதித்த ஏவிஎம் நிறுவனத்திற்கு நன்றி" என்றார்.