32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
1940 வரையிலான தமிழ் படங்கள் பெரும்பாலும் இந்து புராண கதைகள், ஆன்மிக குருக்கள் ஆகியோரை மையமாக கொண்டே உருவானது. வாழ்க்கை பிரச்னைகளுக்கு ஆன்மிக குருமார்கள் தரும் பதில்கள், புராண படங்களில் கிருஷ்ண பகவான் தரும் தீர்வுகள் என்பதாக அமைந்தது.
இந்த நிலையில் பவுத்த மத பின்னணியில் உருவாகி புத்தர் பிரச்னைகளை தீர்த்த படமாக உருவானது 'அசோக்குமார்'. தியாகராஜ பாகவதரின் வெள்ளி விழா படங்களில் இதுவும் ஒன்று. அவருடன் சித்தூர் வி.நாகையா, பி.கண்ணாம்பா, டி.வி.குமுதினி, எம்.ஜி.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் டி.ஏ.மதுரம் உள்ளிட்ட பலர் நடித்தனர். ராஜா சந்திரசேகர் இயக்கி இருந்தார்.
அசோக சக்ரவர்த்தியின் மகன் குணாளன்(பாகவதர்) போர்களில் வெற்றி பெற்று திரும்பியதும் அவருக்கு திஷ்யரக்ஷி என்ற இளவரசியை மணமுடிக்க விரும்புகிறார் மன்னர் அசோகர். ஆனால் குணாளனோ காஞ்சனமாலா(குமுதினி) என்ற பெண்ணை காதலிக்கிறார். இதனால் ஆத்திரம் அடையும் திஷ்யரக்ஷி சதிவேலைகள் செய்து குணாளனையும், காஞ்சனமாலாவையும் அரண்மனையை விட்டு விரட்டுகிறார். அதோடு குணாளனின் கண்கள் பறிக்கப்படுகிறது. இதனால் குணாளனும், காஞ்சனமாலாவும் பிச்சை எடுத்து வாழ்கிறார்கள். ஒரு கட்டத்தில் உண்மையை அறியும் அசோக சச்ரவர்த்தி மகனை நாடு முழுக்க தேடி அலைகிறார். கடைசியில் அவனை கண்டுபிடிக்கிறார். அப்போது புத்தர் தோன்றி குணாளனுக்கு கண்பார்வை தருவதோடு, அசோகரையும் நல்வழிப்படுத்துகிறார். இதுதான் படத்தின் கதை.
இது வரலாறு அல்ல, வடநாட்டில் சொல்லப்பட்டு வந்த நாட்டுப்புற கதை. ஏற்கெனவே மவுன படமாகவே இந்த கதை தயாராகி இருந்தது. பின்னர் ஹிந்தியிலும், தமிழிலும் பேசும் படமாக தயாரானது.
'உனை கண்டு மயங்காத பேர்களுண்டோ...' என்ற பாகவதர் பாடல் இன்றைக்கும் காற்றோடு கலந்து காதுகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. படத்தை யு டியூப்பில் இப்போதும் காணலாம்.