கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடிக்கும் அவரது 45வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோயம்பத்தூரில் ஆரம்பமானது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அப்படத்திலிருந்து அவர் திடீரென விலகியிருக்கிறார்.
அவருக்குப் பதிலாக சாய் அபயங்கர் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். பின்னணிப் பாடகர் திப்பு, பாடகி ஹரிணி ஆகியோரின் மகன்தான் சாய் அபயங்கர். 'கட்சி சேரா' என்ற அவரது ஆல்பம் இந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இசைத் தளங்களில் அதிகம் கேட்கப்பட்ட பாடலாக அது அமைந்துள்ளது.
ஏற்கெனவே 'பென்ஸ்' என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது சூர்யாவின் 45வது படத்திற்கும் இசையமைப்பாளராகப் பணியாற்ற உள்ளார்.
ஏஆர் ரஹ்மான் திடீரென விலகியதற்கான காரணம் என்ன என்பதை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை.




