22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடிக்கும் அவரது 45வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோயம்பத்தூரில் ஆரம்பமானது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அப்படத்திலிருந்து அவர் திடீரென விலகியிருக்கிறார்.
அவருக்குப் பதிலாக சாய் அபயங்கர் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். பின்னணிப் பாடகர் திப்பு, பாடகி ஹரிணி ஆகியோரின் மகன்தான் சாய் அபயங்கர். 'கட்சி சேரா' என்ற அவரது ஆல்பம் இந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இசைத் தளங்களில் அதிகம் கேட்கப்பட்ட பாடலாக அது அமைந்துள்ளது.
ஏற்கெனவே 'பென்ஸ்' என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது சூர்யாவின் 45வது படத்திற்கும் இசையமைப்பாளராகப் பணியாற்ற உள்ளார்.
ஏஆர் ரஹ்மான் திடீரென விலகியதற்கான காரணம் என்ன என்பதை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை.