32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
சின்னத்திரையிலிருந்து சென்று வெள்ளித்திரையில் கலக்கி வரும் வாணி போஜன், சோஷியல் மீடியா ட்ரோல்களால் அதிகம் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் என பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அவரது பேட்டியில், ''சமூக வலைதள ட்ரோல்களை விட சமூக வலைதளமே ஒரு அழுத்தத்தை கொடுக்கிறது. ஒரு படத்திலிருந்து தூக்கிவிட்டால் ஏன் உங்களை தூக்கிவிட்டார்கள் என துக்கம் விசாரிப்பது போல் கேட்பார்கள். வெளிநாடு சென்று போட்டோ போட்டால் படங்கள் இல்லை என்று சொல்வார்கள்.
நட்பு ரீதியில் நடிகருடன் படம் எடுத்தால் அதையும் ட்ரோல் செய்வார்கள். சில சமயம் முகத்தை கட் செய்துவிட்டு ஆபாசமாக பயன்படுத்துவார்கள். அதையும் மக்கள் நம்பிவிடுவார்கள். இந்த மாதிரியான ட்ரோல்களால் ஹீரோக்களை விட ஹீரோயின்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்,'' என்றார்.