தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
சின்னத்திரையிலிருந்து சென்று வெள்ளித்திரையில் கலக்கி வரும் வாணி போஜன், சோஷியல் மீடியா ட்ரோல்களால் அதிகம் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் என பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அவரது பேட்டியில், ''சமூக வலைதள ட்ரோல்களை விட சமூக வலைதளமே ஒரு அழுத்தத்தை கொடுக்கிறது. ஒரு படத்திலிருந்து தூக்கிவிட்டால் ஏன் உங்களை தூக்கிவிட்டார்கள் என துக்கம் விசாரிப்பது போல் கேட்பார்கள். வெளிநாடு சென்று போட்டோ போட்டால் படங்கள் இல்லை என்று சொல்வார்கள்.
நட்பு ரீதியில் நடிகருடன் படம் எடுத்தால் அதையும் ட்ரோல் செய்வார்கள். சில சமயம் முகத்தை கட் செய்துவிட்டு ஆபாசமாக பயன்படுத்துவார்கள். அதையும் மக்கள் நம்பிவிடுவார்கள். இந்த மாதிரியான ட்ரோல்களால் ஹீரோக்களை விட ஹீரோயின்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்,'' என்றார்.