தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் |

பிரபல முன்னாள் மலையாள நடிகையும் நடிகர் பிஜு மேனனின் மனைவியுமான சம்யுக்தா வர்மா தன் பெயரில் பல போலியான கணக்குகள் உலா வருவதாக ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழில் சரத்குமார், நெப்போலியன் நடித்த ‛தென்காசி பட்டணம்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர். மொத்தமே 18 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். நடிகர் பிஜு மேனனை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது பேஸ்புக்கில் இவரது பெயரில் ஒன்றரை லட்சம் பேர் பின் தொடரும் விதமாக போலியாக கணக்கு இருக்கிறது. இது மட்டுமல்ல இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பல போலியான கணக்குகள் இருக்கின்றன.
ஆனால் தனக்கு இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெற்ற ஒரே ஒரு அதிகாரப்பூர்வமான கணக்கு மட்டுமே இருப்பதாகவும் மற்ற அனைத்துமே போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ரசிகர்கள் யாரும் அதில் பகிரப்படும் தகவல்களை பார்த்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி போலி கணக்கை செயல்படுத்தி வருபவர்கள் உடனடியாக அவற்றை நீக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.