ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

விஷால் நடித்த 'ஆக்ஷன்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தொடர்ந்து 'ஜகமே தந்திரம், கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி, பொன் ஒன்று கண்டேன், மாமன், தக் லைப்' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'கட்டா குஸ்தி 2' படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுவதாக தற்போது ஐஸ்வர்ய லட்சுமி பதிவிட்டுள்ளார்.
‛‛சமூகவலைதளம் என்னிடமிருந்த நிஜ சிந்தனையை பறித்தது. சொற்கள் மற்றும் மொழியை பாதித்தது, எளிய இன்பத்தையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றியது. வாழ்க்கையில் மேலும் அர்த்தமுள்ள தொடர்புகளையும் சினிமாவையும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன். நான் அர்த்தமுள்ள சினிமாவை உருவாக்க முடிந்தால் எனக்கு பழைய பாணியில் உங்களுடைய அன்பைக் கொடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை அனுஷ்கா, சமூக வலைத்தளங்களிலிருந்து கொஞ்சம் இடைவெளி எடுக்கிறேன் என நேற்று பதிவிட்டிருந்தார். ஆனால், ஐஸ்வர்ய லட்சுமி மொத்தமாக விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.
இன்றைய யுகத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் அவர் எவ்வளவு காலம் விலகியிருப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.