இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு | சின்னத்திரையில் பார்த்திபன் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தனது அண்ணன் சக்கரபாணி, மற்றும் சில மூத்த படத் தயாரிப்பாளர்களில் காலில் விழுந்து வணங்கி உள்ளார். ஆனால் அவரே ஒரு நடிகையின் காலில் விழுந்து வணங்க நினைத்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல. 'அலைகள் ஒய்வதில்லை' படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்த கமலா காமேஷ்.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் 100வது நாள் விழாவில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார். படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு கேடயம் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது பாரதிராஜாவையும், படத்தையும் பாராட்டி பேசிவிட்டு, “படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்திருப்பவர் பிரமாதமாக நடித்திருந்தார். படத்திலேயே அவருடைய நடிப்புதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் உண்மையிலேயே வயதானவராக இருப்பார், அவர் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரோ இளமையான பெண்ணாக இருக்கிறார். அதனால் அவரை இருகரம் கூப்பி வணங்குகிறேன்” என்று பேசினார். விழா முடிந்ததும் கமலா காமேஷை தனது காரில் அவரது வீடு வரை அழைத்துச் சென்று மரியாதை செய்தார்.