லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி உள்ள வேட்டையன் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நடித்த ஓரளவு பிரபலமில்லாத, தமிழுக்கு புதிதான நட்சத்திரங்கள் கூட நன்கு வெளிச்சம் பெற்றுள்ளனர். அப்படி இந்த படத்தில் ஆரம்பக் காட்சிகளிலேயே ஒரு தாதாவாக வந்து போலீஸ் அதிகாரியான ரஜினியின் என்கவுன்டருக்கு பலியாகும் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மலையாள வில்லன் நடிகர் சாபுமோன் அப்துசமது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றவர்.
இந்த நிலையில் வேட்டையன் படம் மூலம் மட்டுமல்லாது சமீபத்தில் கேரளாவில் கைது செய்யப்பட்ட போதை பொருள் கடத்தல் தாதா ஓம் பிரகாஷ் என்பவருடன் தொடர்புபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிசாசு பட நடிகை பிரயாகா மார்ட்டினுக்கு சட்ட ரீதியான உதவிகளை செய்து அந்த சிக்கலில் இருந்து அவர் வெளியே வர உதவி செய்ததற்காகவும் கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகளில் அடிபட்டு வருகிறார் சாபுமோன்.
இந்த நிலையில் முதன்முறையாக இயக்குனராகவும் அடி எடுத்து வைத்துள்ளார் சாபுமோன். இந்த படத்தில் கதாநாயகியாக அதே பிரயாகா மார்ட்டின் தான் நடிக்கிறார். இவர் சாபுமோனின் நெருங்கிய குடும்ப நண்பரும் கூட. அடிப்படையில் சட்டம் படித்தவரான சாபுமோன் தனது முதல் படமும் நீதிமன்றத்தை மையப்படுத்திய படமாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.