காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
மலையாள குணசித்ர நடிகை மாலா பார்வதி. தமிழில் இது என்ன மாயம், நிமிர், மாரா, எப்ஐஆர், அன்னபூரணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக இவர் மதுரையில் தங்கி இருந்தார்.
அப்போது காலை 11.50 மணியளவில் மாலா பார்வதிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய ஒரு நபர், தாங்கள் ஒரு கூரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் எம்டிஎம்ஏ போதைப்பொருள் இருப்பதாகவும், இதனை நாங்கள் போலீசில் ஒப்படைத்தால் பெரிய பிரச்சினையை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும்” என்று கூறியுள்ளார். ஆனால், தான் யாருக்கும் பார்சல் அனுப்பவில்லை என்று மாலா பார்வதி கூறினார்.
சிறிது நேரத்திற்கு பிறகு மும்பை போலீஸ் அதிகாரி என்று கூறி ஒருவர் மாலா பார்வதிக்கு போன் செய்து அவரது வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். இதில் சந்தேகமடைந்த மாலா பார்வதி, உடனடியாக இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து அவர் கூறும்போது “மும்பை போலீஸ் என்று கூறி என்னை பல மணி நேரம் மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தனர். போலீஸ் அதிகாரி என்று கூறிய நபர் அனுப்பி வைத்த அடையாள அட்டையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக அவரது போன் இணைப்பை துண்டித்து விட்டேன்” என்றார்.
இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளிக்கவில்லை. என்றாலும் இதுபோன்ற மோசடி ஆசாமிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.