'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

மிஷ்கின் இயக்கிய ‛பிசாசு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரயாகா மார்ட்டின். தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் கூட மலையாளத்தில் சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக இவரது கைவசம் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதேசமயம் இப்படி படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நாட்களில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதை ரொம்பவே விரும்புபவர் பிரயாகா மார்ட்டின்.
சமீபத்தில் கென்யாவுக்கு தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார் பிரயாகா மார்ட்டின். அங்கே தனது குடும்பத்தினர் மற்றும் அங்கே உள்ள தனது உறவினர்களுடன் சேர்ந்து ஜாலியாக சுற்றிப்பார்த்து பொழுதை போக்கியுள்ளார். ஆனால் அப்படி சுற்றிப் பார்த்தபோது ஒரு இடத்தில் தனது செல்போனை பறி கொடுத்துள்ளார் பிரயாகா மார்ட்டின்.
தனது போன் திருடு போய்விட்டது என்றும் ஐந்து வருடமாக என் நினைவுகளை சுமந்து கொண்டிருந்த என் செல்போன் காணாமல் போனது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தினாலும் உறவினர்கள் என்னை சமாதானப்படுத்தியதால் அதிலிருந்து ஓரளவு மீண்டு வந்தேன் என்றும் கூறியுள்ளார் பிரயாகா மார்ட்டின்.




