'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

கேரளாவில் கொச்சியில் சமீபத்தில் 'ஹார்ட்டஸ் 2025' என்கிற பெயரில் கலாச்சார விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்லால், மஞ்சு வாரியர் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் கமல்ஹாசன் அரசியல் குறித்தும் பேசினார்.
அங்கிருந்த மஞ்சு வாரியர் பேசும்போது, “என்னை அரசியலில் சேரச்சொல்லி பல இடங்களில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் அரசியலில் சேரும் அளவிற்கு எனக்கு போதிய அறிவு இல்லை. அரசியலில் சேர வேண்டும் என்றால் ஒருவருக்கு நிச்சயம் நல்ல அறிவு இருக்க வேண்டும்” என்று கூற, அருகில் இருந்த கமல், “அப்படியா நினைக்கிறீர்கள்?” என்று கேட்டு சிரித்தார்.
தொடர்ந்து கமல்ஹாசன் அவரிடம் கூறும்போது, “உங்களுடைய அரசியல் நம்பிக்கைகளை நீங்கள் பர்சனல் ஆக வைத்துக் கொள்வதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் நீங்கள் கட்டாயம் ஓட்டுச்சாவடிக்கு வர வேண்டும். இது ஒன்று தான் என்னுடைய கோரிக்கை. நீங்கள் அரசியலுக்கு வரக்கூடிய நேரமும் அதுதான். ஓட்டுச்சாவடி ரொம்பவே அழுக்கடைந்த இடமாக இருந்தாலும் கூட நீங்கள் கட்டாயம் வர வேண்டும்” என்று கூறினார்.




