ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழ் நடிகையான ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார். 2018ம் ஆண்டு துபாயில் நடந்த ஒரு விழாவுக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கு குளியல் அறையில் தவறி விழுந்து இறந்தார். ஸ்ரீதேவி நினைவாக அவர் வாழ்ந்த லோகந்த் வாலாவில் உள்ள ஒரு பகுதிக்கு 'ஸ்ரீதேவி சவுக்' என்று பெயரிடப்படும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்திருந்தது.
அவர் இறந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு, லோகந்த் வாலாவில் 'ஸ்ரீதேவி கபூர் சவுக், திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது இளைய மகள் குஷி கபூர் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.