ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
1985ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 'பியார் ஜக்தா நகின்'. இந்தியாவின் 7 மொழிகளில் இது ரீமேக் ஆனது. கன்னட இயக்குனர் துவாரகீஷ் இதனை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார். தனது நண்பரான ரஜினியை சந்தித்து தனது திட்டத்தை கூறினார்.
ஏற்கெனவே படத்தை பார்த்திருந்த ரஜினி, உடனே அதற்கு சம்மதித்தார். அதற்கு அவர் வைத்த ஒரே நிபந்தனை படத்தின் நாயகியாக ஸ்ரீதேவி நடிக்க வேண்டும் என்பதுதான். அப்போது ஸ்ரீதேவி ஹிந்தியில் பிசியாக இருந்தால் அது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார் துவாரகீஷ்.
இந்தி படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய 'தும்சே மில்கர் நா ஜனா' பாடல் அப்படியே இடம் பெற வேண்டும், அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த பாட்டுக்கு நானும் ஸ்ரீதேவியும் இணைந்து நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே எனக்கு வரும். அதனால் ஸ்ரீதேவியிடம் நானே பேசுகிறேன் என்று கூறினார் ரஜினி.
அதன்படி ஸ்ரீதேவியுடன் பேசிய ரஜினி உடனேயே அவர் தனது ஹிந்திப் பட தேதிகளை ஒதுக்கி வைத்து விட்டு நடித்தார். அந்த படம்தான் 'நான் அடிமை இல்லை'. இந்த படத்தில் அதே 'மிஸ்ரா சிவரஞ்சனி' ராகத்தில் ஒரு ஜீவன் தான் பாடல், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜானகி குரலில், விஜய் ஆனந்த் இசையில் உருவானது. அதோடு எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், ஜானகியும் தனித்தனியாகவும் இந்த பாடலை பாடினார். படத்தில் 3 இடத்தில் இந்த பாடல் இடம் பெற்றது.