ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் 'மனோகரா'. பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய 'மனோகரா' என்ற நாடகம் அதே பெயரில் சினிமா ஆனது. எல்.வி.பிரசாத் இயக்கம், சிவாஜி, கண்ணாம்பா, டி.ஆர்.ராஜகுமாரி நடிப்பு, கருணாநிதியின் அனல் தெறிக்கும் வசனங்களால் இப்போதும் பேசப்படுகிற படம்.
ஆனால் இந்த படத்தின் மூலக் கதை ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியருடையது என்பது பலரும் அறியாத ஒன்று. ஆங்கில நாடங்களை விரும்பி படித்து வந்த பம்மல் சம்பந்த முதலியார் ஷேக்ஸ்பியரின் “ஹேம்லெட்” நாடகத்தை படித்தார். அந்த நாடகத்தால் ஈர்க்கப்பட்ட அவர் அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து 'அமலாதித்யன்' என்ற நாடகத்தை எழுதினார். இந்த நாடகம் ஆங்கில நாடகம் போன்றே அமைந்ததால் அது வெற்றி பெறவில்லை. பின்னர் இதே நாடகத்தை தமிழ்நாட்டுக்கு ஏற்ற மாதிரி மாற்றி, அதற்கேற்ப எளிய வசனங்களை எழுதிய நாடகம்தான் 'மனோகரா'. இது நாடகமாக நல்ல வரவேற்பை பெற்றது, சம்பந்த முதலியாரே மனோகரனாக நடித்தார்.
அதன் பின், நடிகர் கே.ஆர்.ராமசாமி, மனோகரா நாடகத்தை தனது நாடக குழுவின் சார்பில் நடத்தி வந்தார். அதில் அவரே கதாநாயகன் மனோகரனாக நடித்திருந்தார். ஒரு வேடிக்கை என்னவென்றால், அந்த மேடை நாடகத்தில், மனோகரனின் தாய் ராணியாக சினிமாவில் கண்ணாம்பா நடித்த வேடத்தில் சிவாஜி பெண் வேடமிட்டு நடித்தார்.
இன்னொரு தகவல் என்னவென்றால் சிவாஜியின் முதல் படமே 'மனோகரா' தான் அமைந்திருக்க வேண்டும். 'பராசக்தி'க்கு முன்பே கருணாநிதி மனோகரா வசனத்தை எழுதிவிட்டு சிவாஜியை நடிக்க வைப்பது என்று முடிவு செய்திருந்தார். ஆனால் மனோகரா சரித்திர படம் என்பதால் அதற்குரிய தயாரிப்பாளர் கிடைக்காததால் பராசக்தி படம் தொடங்கப்பட்டது.