ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழ்நாட்டை சேர்ந்த நட்டி என்கிற நட்ராஜ் பாலிவுட்டில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்தார். பின்னர் நடிகராகி நாளை, சக்கர வியூகம், மிளகா, முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை, கதம் கதம், எங்கிட்ட மோதாதே, கர்ணன், மகாராஜா படங்களில் நடித்தார். தற்போது வெளிவர இருக்கும் 'பிரதர்' படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் 'ஆண்டவன் அவதாரம்'. இதற்குமுன் 'நஞ்சுபுரம்', 'அழகு குட்டி செல்லம்', 'சாலை' ஆகிய படங்களை இயக்கியுள்ள சார்லஸ், தனது லைட் சவுண்ட் அன்ட் மேஜிக் நிறுவனத்துக்காக இயக்குகிறார். முக்கிய வேடத்தில் ராகவ் நடிக்கிறார். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, நவ்னீத், ராகவ் இசை அமைக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் சார்லஸ் கூறும்போது "இப்படத்துக்கு 'அவதாரம்' என்று பெயரிட நினைத்தேன். அந்த டைட்டில் நாசரிடம் இருப்பதால், 'ஆண்டவன் அவதாரம்' என்று பெயரிட்டேன். நட்டி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இது தந்தை - மகன், அண்ணன் - தம்பி வேடமாக இருக்காது. சயின்ஸ் பிக்ஷன் என்றாலும், நிகழ்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை வைத்து படமாக்குகிறோம்" என்றார்.