ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் |

விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்புடன் வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் விஜய்சேதுபதி பல கேள்விகளுக்கு ரசிகர்கள் அறியாத பல புது விஷயங்களை பதிலாக கூறி வருகிறார். அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என ஒரு செய்தி சோசியல் மீடியாவில் பரபரப்பாக வெளியானது.
ஆனால் அதன் பிறகு விஜய்சேதுபதி அந்த படத்தில் நடிக்கவில்லை என்கிற தகவலும் அதன்பிறகு பஹத் பாசில் அந்த படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தியும் அடுத்தடுத்து வெளியாகின. இந்த நிலையில் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏன் மறுத்தீர்கள் என்கிற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளிக்கையில், “புஷ்பா பட வாய்ப்பு நான் மறுக்கவில்லை.. அதே சமயம் நீங்கள் எப்போதும் உண்மையையே பேசிக்கொண்டு இருக்கக் கூடாது.. அது உங்களுக்கு நல்லது இல்லை.. சில நேரங்களில் பொய் சொல்வது நன்று” என்று ஒரு புதிரான பதிலை கூறியுள்ளார்.
அப்படி விஜய்சேதுபதி தன்னை தேடி வந்த கதாபாத்திரத்தை, தான் மறுக்கவில்லை என்றால் என்ன காரணத்திற்காக அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்பதையும் நாசுக்காக சொல்ல மறுத்து விட்டார். அவர் பஹத் பாசில் நடித்த பன்வார்சிங் செகாவத் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாரா, அல்லது சுனில் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாரா என்பதெல்லாம் இயக்குநர் சுகுமாருக்கும் விஜய்சேதுபதிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.




