ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு கடந்த சில நாட்களாகவே கன்னட திரை உலகை பரபரப்பாகியுள்ளது. தனது காதலியான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகா சுவாமி தேவையில்லாத டார்ச்சர் கொடுத்தார் என்பதால் சிலரின் உதவியுடன் நடிகர் தர்ஷன் இந்த கொலையை செய்துள்ளார் என்று கூறியுள்ள போலீசார், தர்ஷனுடன் பவித்ரா கவுடா உள்ளிட்ட 10 பேருக்கு மேல் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்துள்ளனர். தர்ஷனின் கைது குறித்து கன்னட திரையுலகில் உள்ள உபேந்திரா, கிச்சா சுதீப் மற்றும் நடிகை ரம்யா உள்ளிட்டோர் கூறும்போது, ரேணுகா சுவாமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இன்னும் சில பிரபலங்கள் இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. நியாயம் கிடைக்க வேண்டும் என பொத்தாம் பொதுவாக கருத்துக்களை கூறி ஒதுங்கிக் கொண்டனர்.
இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும் கன்னட நடிகையுமான சஞ்சனா கல்ராணி தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இவர் தர்ஷனுடன் இணைந்து அர்ஜூன் மற்றும் அக்ரஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தர்ஷனின் கைது குறித்து அவர் கூறும்போது, “நான் தர்ஷனுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளேன். ஒரு நபர் ஏற்கனவே ஓரிருமுறை சில சர்ச்சையான நிகழ்வுகளில் சிக்கியதை வைத்து அவரைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நடப்பது தான். இந்த வழக்கில் தர்ஷன் குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ளாரே தவிர, அவரை நீங்களாகவே குற்றவாளி என கூறுவது தவறு” என்று கூறியுள்ளார்.
சஞ்சனா கல்ராணியின் இந்த ஆதரவு குரல் ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகினரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.