வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

இந்தியத் திரையுலகத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்று தெலுங்குப் படமான 'புஷ்பா 2'. 1800 கோடி வரை இந்தப் படம் வசூலித்தது. காட்டில் செம்மரங்களைக் கடத்தும் புஷ்பராஜ் என்ற கடத்தல்காரன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் அல்லு அர்ஜுன்.
காடு, மரக் கடத்தல் என்றாலே தமிழக, கர்நாடக எல்லை வனப்பகுதிகளில் பெரும் கடத்தல்காரனாக விளங்கிய வீரப்பன் தான் ஞாபகம் வரும். அவன் உயிரோடு இருந்த காலத்தில் நாளிதழ்களை படித்தாலே பல கடத்தல் கதைகளை எழுதிவிடலாம். ஆந்திராவில் செம்மரக் கடத்தல் என்பது பிரபலம். அதனால், 'புஷ்பா 2' படத்தில் அதை மையமாக வைத்தார்கள்.
தமிழில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜயகாந்த்தின் 100வது படமாக 1991ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'கேப்டன் பிரபாகரன்'. இப்படத்தை டிஜிட்டல் தரம் உயர்த்தி நாளை மறுதினம் வெளியிட உள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று நடைபெற்றது.
இப்படத்தில் கெடுபிடி அதிகமானதால் நீர் வழியே சந்தன மரங்களை மிதக்கவிட்டு கடத்தும் காட்சி ஒன்று உள்ளது. அந்தக் காட்சியை அப்படியே 'புஷ்பா' படத்தில் வைத்திருப்பார்கள். 34 வருடங்களுக்கு முன்பு வந்த படம் ரசிகர்கள் மறந்திருப்பார்கள் என அந்தக் காட்சியை அப்படியே 'புஷ்பா' படத்தில் காப்பியடித்து வைத்திருக்கிறார் இயக்குனர்.
'கேப்டன் பிரபாகரன்' படம் இப்போது புதிதாக வந்திருந்தால் 'புஷ்பா 2' படத்தின் வசூலையே மிஞ்சியிருக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை.