ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
இந்தியத் திரையுலகத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்று தெலுங்குப் படமான 'புஷ்பா 2'. 1800 கோடி வரை இந்தப் படம் வசூலித்தது. காட்டில் செம்மரங்களைக் கடத்தும் புஷ்பராஜ் என்ற கடத்தல்காரன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் அல்லு அர்ஜுன்.
காடு, மரக் கடத்தல் என்றாலே தமிழக, கர்நாடக எல்லை வனப்பகுதிகளில் பெரும் கடத்தல்காரனாக விளங்கிய வீரப்பன் தான் ஞாபகம் வரும். அவன் உயிரோடு இருந்த காலத்தில் நாளிதழ்களை படித்தாலே பல கடத்தல் கதைகளை எழுதிவிடலாம். ஆந்திராவில் செம்மரக் கடத்தல் என்பது பிரபலம். அதனால், 'புஷ்பா 2' படத்தில் அதை மையமாக வைத்தார்கள்.
தமிழில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜயகாந்த்தின் 100வது படமாக 1991ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'கேப்டன் பிரபாகரன்'. இப்படத்தை டிஜிட்டல் தரம் உயர்த்தி நாளை மறுதினம் வெளியிட உள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று நடைபெற்றது.
இப்படத்தில் கெடுபிடி அதிகமானதால் நீர் வழியே சந்தன மரங்களை மிதக்கவிட்டு கடத்தும் காட்சி ஒன்று உள்ளது. அந்தக் காட்சியை அப்படியே 'புஷ்பா' படத்தில் வைத்திருப்பார்கள். 34 வருடங்களுக்கு முன்பு வந்த படம் ரசிகர்கள் மறந்திருப்பார்கள் என அந்தக் காட்சியை அப்படியே 'புஷ்பா' படத்தில் காப்பியடித்து வைத்திருக்கிறார் இயக்குனர்.
'கேப்டன் பிரபாகரன்' படம் இப்போது புதிதாக வந்திருந்தால் 'புஷ்பா 2' படத்தின் வசூலையே மிஞ்சியிருக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை.